சாலை விபத்தில் 2 மாணவர்கள் பலி: எம்எல்ஏ ஆறுதல்

சங்கரன் கோவில் சாலை விபத்தில் 2 மாணவர்கள் உயரிழந்த நிலையில், குடும்பத்தினருக்கு எம்எல்ஏ ஆறுதல் கூறினார்.

Update: 2024-05-21 01:12 GMT

சங்கரன் கோவில் சாலை விபத்தில் 2 மாணவர்கள் உயரிழந்த நிலையில், குடும்பத்தினருக்கு எம்எல்ஏ ஆறுதல் கூறினார். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள் பட்டி விலக்கில் சரக்கு வாகனம் மற்றும் இருசக் கர வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த 2 மாணவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல் கூறினார். சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலி சத்திரத்தை சேர்ந்த சக்தி வேல் மகன் செல்வராஜ் (13). மற்றும் தெற்குபனவு டலியை சேர்ந்தமணிகண் டன்மகள் வீரபாண்டி (17) ஆகியோர் சங்கரன்கோ வில் அருகே ஆயாள்பட்டி விலக்கு அருகில் பைக் கில் வரும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாப மாக உயிர் இழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று அவர்கள் குடும்பத்தினரை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆறுதல் கூறினார். அப்பொழுது மேல நீலிதநல்லூர் கிழக்கு ஒன் றிய செயலாளர் பெரிய துரை, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதய குமார், ஜெயக்குமார் மற் றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News