மழையில் மூழ்கிய 200 ஏக்கர் பயிர்கள்; விவசாயிகள் கவலை

சாத்தூர் அருகே கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, 200 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2023-12-19 08:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நல்லமுத்தன்பட்டி ராவுத்தன்பட்டி கிராமங்களில் இரண்டு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக காற்றாற்று வெள்ளத்தில் அருகில் உள்ள விவசாய நிலங்களில் நீர் புகுந்ததால் விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோளம் உளுந்து பாசிப்பயறு மிளகாய் மேலும் கத்தரிக்காய் வெண்டைக்காய் போன்ற விவசாய செடிகள் அனைத்தும் காற்றாற்று வெள்ளத்தில் வந்த நீரில் விவசாய நிலத்தில் புகுந்து மூழ்கின இந்தப் பகுதியில் நல்லமுத்தன்பட்டி ராவுத்தன்பட்டி போன்ற கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலத்தில் காற்றாற்று வெள்ளம் புகுந்ததால் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால் விவசாய அனைவரும் கவலையில் உள்ளனர்.
Tags:    

Similar News