ராணிப்பேட்டையில் 21 அதிகாரிகள் பணியிட மாற்றம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர்கள், துணை தாசில்தார்கள் உள்பட 21 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-06-27 09:35 GMT

ஆட்சியர் வளர்மதி 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் பல்வேறு பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.அதன்படி வாலாஜா வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் நெமிலிக்கும், நெமிலி வட்ட வழங்கல் அலுவலர் தனலட்சுமி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட கண்காணிப்பு அலுவலராகவும், கலவை வட்ட வழங்கல் அலுவலர் ஷம்சாத் கலவை டி.புதூர் துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் முத்துகுமாருக்கு கூடுதலாக அரக்கோணம் தேர்தல் தனி துணை தாசில்தார் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.பயிற்சி முடித்த துணை தாசில்தார் பாஸ்கரன் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக நிலப்பிரிவில் தலைமை உதவியாளராகவும், கலெக்டர் அலுவலக கியூ பிரிவு கண்காணிப்பாளர் சுபாஷினி நிலப்பிரிவு தலைமை உதவியாளராகவும், வாலாஜா தலைமையிடத்து துணை தாசில்தார் சென்னை-கன்னியாகுமரி தொழில்தட திட்ட அலுவலக தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் ஆற்காடு மண்டல துணை தாசில்தார் லோகேஷ் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளராகவும் பயிற்சி முடித்த துணை தாசில்தார்கள் சந்தியா, விஜயசேகர், பாலாஜி மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட கண்காணிப்பாளர் ரேணுகா உட்பட பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News