சாந்திகிரி ஆசிரமத்தின் 25- ஆம் ஆண்டு வெள்ளி விழா

சாந்திகிரி ஆசிரமத்தின் 25- ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-07 13:18 GMT
சாந்திகிரி ஆசிரமத்தின் 25- ஆம் ஆண்டு வெள்ளி விழா

 செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் பகுதியில் அமைந்துள்ள சாந்தி கிரி ஆசிரமத்தின் 25- ஆம் ஆண்டு வெள்ளி விழா சாந்தி கிரி ஆசிரம வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்பு ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், ஒன்றிய பெரு துணைத்தலைவர் கிருஷ்ணவேணிதனியாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News