விழுப்புரம் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது

Update: 2024-06-25 10:47 GMT

கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்தது கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமையிலான, சேர்க்கை குழுவினர், காலை 9:00 மணிக்கு தொடங்கி கலந்தாய்வை நடத்தினர். சுழற்சி-1 பிரிவில் 1,000 பேரும், சுழற்சி-2 பிரிவில் 700 மாணவர்களும் பங்கேற்றனர்.

இதில், 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டது.தொடர்ந்து, 25ம் தேதி பி.ஏ., வரலாறு, பொருளியல் பிரிவுக்கும், 26ம் தேதி பி.காம்., - பி.ஏ., தொழில் பிரிவு மாணவர்களுக்கும், 27ம் தேதி பிற்பட்டோர், முஸ்லிம்,

அருந்ததியர், மலைவாழ் பிரிவு மாணவர்களுக்கான அனைத்து பாட பிரிவுகளுக்கும், 28ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் பாட பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

Tags:    

Similar News