3 நடன குதிரைகளுடன் விநாயகர் சதுர்த்தி தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையத்தில் 3 நடன குதிரைகளுடன் விநாயகர் சதுர்த்தி தீர்த்தக்குட ஊர்வலம்

Update: 2024-09-07 08:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி நாளையொட்டி குமாரபாளையம் நகரில் 31 இடங்களில் விநாயகர் சிலைகள் கொலு வைத்து வழிபட போலீசார் அனுமதி கொடுத்துள்ள நிலையில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள கற்பக விநாயகர் கோயில் சார்பில் விநாயகர் சிலை கொலு வைக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. பெண்கள் பெருமளவில் பங்கேற்று தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். இதில் 3 நடன குதிரைகள் நடனமாடியபடி வந்தது அனைவரையும் ரசிக்க வைத்தது. கோவில் வளாகத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வர் தரணிதரன் பங்கேற்று சுவாமியை வழிபட்டார். விழாக்குழு நிர்வாகி சிங்காரவேல் உள்ளிட்ட பலரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Similar News