3 பஸ்கள், 1 லாரி அடுத்தடுத்து மோதி விபத்து: 2 பேர் காயம்

காயம்

Update: 2024-09-02 19:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்தனர். திருச்சியில் இருந்து சென்னைக்கு தனியார் பஸ் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் அருகே சென்ற போது, பின்னால் வந்த தனியார் சொகுசு பஸ், தனியார் பஸ் மீது மோதியது.அப்போது அதன் பின்னால் வந்த அரசு விரைவு பஸ், தனியார் சொகுசு பஸ் மீது மோதியது. அதன் பின்னால் சென்ற மினி லாரி அரசு விரைவு பஸ் மீது மோதியது. அடுத்தடுத்து 4 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில், பஸ்சில் பயணம் செய்த அரியலுார் மாவட்டம், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன், 38; துாத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 42; ஆகிய இருவரும் காயமடைந்தனர். எடைக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News