கோயில்களை இடிக்க 3 நாள் கால அவகாசம்

Update: 2023-11-21 11:16 GMT

கோவில்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வேடசந்துார்: மினுக்கம்பட்டியில் ஓடை புறம்போக்கில் கட்டப்பட்ட 3 கோயில்களை இடிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 2 கோவில்கள் இடிக்கப்பட்டது. நேற்று மீதமுள்ள கருப்பண்ணசாமி கோயில் இடிக்கப்பட இருந்த நிலையில் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையில் 3 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டது.

இதை இடிக்கும் நோக்கில் நேற்று பழநி ஆர்.டி.ஓ., (பொறுப்பு) சிவக்குமார், தாசில்தார் விஜயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் மண் அள்ளும் எந்திரத்துடன் மினுக்கம்பட்டிக்கு சென்றனர். டி.எஸ்.பி., துர்கா தேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஊர் பொதுமக்கள் சார்பில் 3 நாள் கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து, அங்குள்ள ஓர் வளாகத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் சார்பில் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடந்தது.இதை தொடர்ந்து நவ.21, 22, 23 என 3 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

Tags:    

Similar News