திருமணத்துக்கு பெண் தர மறுத்ததால் தந்தையை தாக்கிய 3 பேர் கைது

பேரணாம்பட்டு அருகே திருமணத்துக்கு பெண் தர மறுத்ததால் தந்தையை தாக்கிய மூன்று பேரை பேரணாம்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-04-15 06:48 GMT

வாக்கு சேகரிப்பு

வேலூர் பேரணாம்பட்டு அருகில் உள்ள மொரசப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிப்பாஷா (32), கூலித்தொழிலாளி. இவருடைய உறவினர் மகனுக்கு பேரணாம்பட்டு டவுன் இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி தெருவைச் சேர்ந்த ஜியாவித் ரஹ்மான் (45) என்பவரின் மகளை திருமணத்துக்கு பெண் கேட்டு நிச்சயித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஜியாவித் ரஹ்மான் தனது மகளை ஆசிப்பாஷாவின் உறவினர் மகனுக்கு திருமணம் செய்து தர மறுத்ததாகவும், வேறு இடத்தில் தனது மகளை திருமணம் செய்து வைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட ஆசிப்பாஷா, உறவினர்கள் அஹம்மத் ஷெரிப் (32), ரேயான் (19) ஆகிய 3 பேரும் சென்று ஜியாவித்ரஹ்மா னிடம் ஏன் பெண் தர மறுக்கிறாய்? எனக் கேட்டு வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அப்போது வாய்த்தகராறு முற்றியதில் 3 பேரும் சேர்ந்து ஜியா வித்ரஹ்மானை இரும்புக்கம்பி, தடியால் சரமாரியாக தாக்கினர். அதில் படுகாயமடைந்த ஜியாவித்ரஹ்மான் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்து முதலுதவி பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து ஜியாவித்ரஹ்மான் புகார் கொடுத்ததன் பேரில் ஆசிப்பாஷா, உறவினர்கள் அஹம்மத் ஷெரிப், ரேயான் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News