குமரியில் யானை தந்தம் விற்க முயன்ற 3 பேர் கைது

கடையாலுமூடு அருகே யானை தந்தங்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் மற்றும் அவரது இரு கூட்டாளிகளை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து தலா 4 யானை தந்தங்கள், பற்களை பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-06-04 02:21 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

கன்னியாகுமரி மாவட்டம்  கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர்  எட்வின் தேவராஜ் (67). இவரது வீட்டில் விற்பனைக்காக யானைத் தந்தங்களை வைத்திருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து  மாவட்ட வனத்துறை  மற்றும் சென்னை வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு இணைந்து, களியல் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினருடன் இணைந்து அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

இதையடுத்து இதற்கு உடந்தையாக இருந்த பிரதீப் குமார்(53) என்பவரும் வனத்துறையினால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இவர்கள் இருவரிடம் நடத்தி விசாரணையில் இதற்கு மூல காரணமாக இருந்தவர்  கல்லரவயல் என்ற  பகுதியை சார்ந்த சுரேஷ் காணி (46) என்பது தெரிய வந்தத பின்பு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் யானை தந்தங்கள் விற்பனைக்காக எட்வின் ராஜ் என்பவரிடம் கொடுத்ததாக கூறினார்.  மேலும் சுரேஷ் காணி என்பவர் வீட்டில் இருந்து 4 யானை பற்கள் கைப்பற்றப்பட்டது.    தொடர்ந்து பறிமுதல் செய்த 4 யானை தந்தங்கள், 4 யானை பற்களுடன்  சம்மந்தபட்ட மூவரையும் கைது செய்து நாகர்கோயில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News