நாகர்கோவிலில் 30 நாட்கள் போக்குவரத்து மாற்றம் 

பாதாள சாக்கடை பணி காரணமாக நாகர்கோவிலில் 30 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-04-28 12:52 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : -       நாகர்கோவில் மாநகரில் முதற்கட்டமாக பால் பண்ணை கல்வாரி லுத்த ரன் ஆலயம் முதல் கலெக்டர் அலுவலக ரவுண்டான வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 30 நாட்களுக்கு நடைபெறுகிறது.      

 இதனால் பார்வதிபுரம் சந்திப்பிலிருந்து பால்பண்ணை, டெரிக் சந்திப்பு, கலெக்டர் அலுவலகம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக பார்வதிபுரம்,  கட்டையன்விளை, வெட்டூர்ணிமடம் வழியாக செல்ல வேண்டும். போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News