306 கிலோ குட்கா, சொகுசு கார் பறிமுதல் எஸ்பி அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் அருகே சொகுசு காரில் குட்கா கடத்திய அண்ணன் - தம்பி உட்பட 3 வாலிபர்கள் கைது, 306 கிலோ குட்கா, சொகுசு கார் பறிமுதல் - எஸ்பி.அதிரடி நடவடிக்கை

Update: 2024-10-02 15:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல், புறநகர் பகுதியில் காரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்துவதாக மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர்கள் அருண்நாராயணன், பாலசுப்ரமணியன் தனிப்பிரிவு காவலர் வினோத் மற்றும் போலீசார் திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி செல்வது தெரியவந்தது இதை அடுத்து காரில் வந்த தாடிக்கொம்பு, அகரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் காளிராஜன்(31), கவாஸ்கர்(28), அம்பாத்துறையை சேர்ந்த மகேந்திரன்(30) ஆகிய 3 பேரை கைது செய்து 306 கிலோ குட்கா மற்றும் சொகுசு கார் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News