ராணிப்பேட்டை மாவட்டத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்

கடந்த ஒரு மாதத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Update: 2024-05-31 17:13 GMT

கஞ்சா பறிமுதல் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 54 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் 57 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதேபோன்று குட்கா தொடர்பாக 71 வழக்குகள் பதியப்பட்டு 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News