ஆத்தூரில் ரூ.3.19 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்

ஆத்தூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.3.19 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம் நடந்துள்ளது.

Update: 2024-03-15 10:31 GMT

விற்பனைக்கு வந்த மஞ்சள்

சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், தென்னங்குடி பாளையம்,தலைவாசல், கள்ளக்குறிச்சி, எறையூர், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 525 விவசாயிகள் 2866 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

பகுதிகளில் இருந்து வந்திருந்த 18 வியாபாரிகள் மஞ்சளில் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். இதில் விராலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக 19,889 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 23,789 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் 16,689 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 18,512 ரூபாய்க்கும்,

பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சம் 23,789 அதி பட்சமாக 30,000 ரூபாய் விலை போனது. 2866 மூட்டைகள் மூலம் 3 கோடியே 19 லட்சத்திற்கு ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags:    

Similar News