4 நாட்களுக்கு பின்னர் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்
தூத்துக்குடியில் 4 நாட்களுக்கு பின்னர் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ;
தூத்துக்குடியில் 4 நாட்களுக்கு பின்னர் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடந்த 4 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்த நிலையில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே நேற்று இரவு புயல் கரையை கடந்தது. இதன் காரணமாக இன்று காலை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். சுழற்சி முறையில் 119 படகுகள் கடலுக்கு சென்றுள்னர்.