ராமாபுரம் அருகே போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது

ராமாபுரம் அருகே போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-19 16:15 GMT

கோப்பு படம் 

ராமாபுரம், சாந்தி நகர் சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற நபரை, ராமாபுரம் போலீசார் பிடித்தனர். அவரிடம் 'ஆஸ்படால் டெபென்ட்டால்' என்ற, போதை மாத்திரை இருந்தது.

விசாரணையில் பிடிபட்டவர், ராமாபுரம் நடேசன் நகரைச் சேர்ந்த தினேஷ், 24, என தெரியவந்தது. தொடர் விசாரணையில், முடிச்சூரைச் சேர்ந்த வசந்தகுமார், ஹரிஹரன் மற்றும் ஜெயராஜ் ஆகியோரிடம் மாத்திரைகளை வாங்கியதாக தெரிவித்தார்.

தினேஷ் தகவல்படி, முடிச்சூர் கக்கன் தெருவில், அவர்கள் தங்கியிருந்த வீட்டை போலீசார் சோதனை செய்தனர். இதில், 100 எம்.ஜி., அளவுடைய 2,300 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், முடிச்சூர் வசந்தகுமார், 23, ஜெயராஜ், 17, காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தைச் சேர்ந்த ஹரிஹரன், 24, ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மும்பையில் இருந்து 50,000 ரூபாய்க்கு மாத்திரைகளை வாங்கி வந்து, கல்லுாரி மாணவர்கள் மற்றும் நன்கு தெரிந்தவர்களுக்கு, ஒரு மாத்திரை 150 ரூபாய் என, விற்பனை செய்ததும் தெரியவந்தது.

Tags:    

Similar News