புத்தக திருவிழாவில் குவிந்த 4000 புத்தகங்கள்

புத்தக திருவிழாவில் சிறைவாசிகளுக்கு வழங்குவதற்காக கூண்டுக்குள் தானம் என்ற புத்தக தான உண்டியல் வைக்க பட்ட நிலையில் 4000 புத்தகங்கள் பெறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Update: 2024-02-13 06:49 GMT

புத்தக திருவிழாவில் குவிந்த 4000 புத்தகங்கள்

நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெறும் 7வது பொருநை புத்தக திருவிழாவில் சிறைவாசிகளுக்கு வழங்குவதற்காக கூண்டுக்குள் தானம் என்ற புத்தக தான உண்டியல் தனி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் தினமும் புத்தகங்களை வழங்கி வருகின்றனர். நேற்று இரவு சுமார் 500 புத்தகங்கள் பலரால் வழங்கப்பட்டன. அந்த வகையில் இதுவரை 4000 புத்தகங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News