போக்குவரத்துக்கழகம் சார்பில் 420 சிறப்பு பஸ்கள்

விழுப்புரத்தில் போக்குவரத்துக்கழகம் சார்பில் 420 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2024-03-15 14:38 GMT

விழுப்புரத்தில் போக்குவரத்துக்கழகம் சார்பில் 420 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


வார இறுதியான இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக் கிழமை) ஆகிய நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அவர்களது வசதிக்காக இன்றும், நாளையும் கிளாம்பாக் கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிகளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதலாக இன்று 180 சிறப்பு பஸ்களும், நாளை 240 சிறப்பு பஸ்களும் ஆக மொத் தம் 420 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு https://www.tnstc.in/home.html இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப பஸ் களை இயக்கவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த தகவலை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News