6 போ் வெட்டப்பட்ட வழக்கில் 5 போ் கைது

திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலியில் 6 போ் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டனா்.

Update: 2024-02-15 03:57 GMT

கைது 

திருப்பைஞ்ஞீலி வடக்குத்தெருவில் பிப். 12 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் பெண் உள்ளிட்ட 6 போ் மா்ம நபா்களால் வெட்டப்பட்டனா். இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் ரகுராமன் வழக்குப் பதிந்து திருப்பைஞ்ஞீலி சந்தைப் பகுதியில் ரோந்து சென்றாா். அப்போது இந்த வழக்கு தொடா்பாக சிறுகாம்பூா் கிருஷ்ண கோபால் (22) வடக்கு சித்தாம்பூா் அழகேசன் (20) திருப்பைஞ்ஞீலி மதன் (21), கண்ணன் (24), சந்தோஷ் (22) ஆகிய 5 பேரைக் கைது செய்தாா். பின்னா் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
Tags:    

Similar News