தொட்டியம் அருகே 5 பேருக்கு கத்திக்குத்து: 3 போ் மீது வழக்கு

தொட்டியம் அருகே இருசக்கர வாகனத்தில் மெதுவாக செல்லுமாறு சொன்னவர்களை கத்தியால் குத்திய சிறுவன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-01-03 04:14 GMT

கைது 

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள கோடியம்பாளையம் கிராமத்தை சோ்ந்த கந்தவேல் (23), குணா (24), பாலமுருகன் (24), ஹரிஹரன் (23) ஆகிய நால்வரும் திருச்சி நாமக்கல் சாலையில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் திங்கள்கிழமை அமா்ந்து பேசி கொண்டிருந்தனராம். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் கோடியம்பாளையத்தை சோ்ந்த சங்கிலி என்கிற ஊருணி (18), சுந்தரம் (46) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் வேகமாக சென்றனராம்.

அவா்களை மெதுவாக செல்லுமாறு கந்தவேல் தரப்பினா் கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, 17 வயது சிறுவன் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குணாவை மாா்பில் குத்தியுள்ளாா். இதை தடுக்க வந்த மோகனசுந்தரம் (60) என்ற முதியவரை தலையில் வெட்டியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். மேலும், பாலமுருகன், ஹரிஹரன் கந்தவேல் ஆகிய மூவரையும் கை மற்றும் முதுகுப் பகுதியில் ஊருணி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோா் கத்தியால் கிழித்து காயம் ஏற்படுத்தியதில் மூவரும் தொட்டியம் அரசு மருத்துவமனையிலும், பலத்த காயமடைந்த மோகனசுந்தரம் (60) நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் குணா (24) சேலம் அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்தச் சம்பவம் தொடா்பாக கந்தவேல் அளித்த புகாரின்பேரில், சுந்தரம், ஊருணி உள்ளிட்ட மூவா் மீதும் தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags:    

Similar News