பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு - மர்ம நபர்கள் கைவரிசை!
தட்டார்மடம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Update: 2024-02-05 06:35 GMT
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகில் உள்ள பொத்தகாலன்விளை கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மரிய மாணிக்கம் மனைவி கௌசல்யா மேரி (77), இவர் அதே கிராமத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு வேகமாக சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூபாய் 2 லட்சம் ஆகும். இந்த சம்பவம் குறித்து கௌசல்யா மேரி தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நகை பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.