குட்கா விற்ற 5 கடைகளுக்கு சீல்

எடப்பாடி அருகே குட்கா விற்ற 5 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2023-12-13 10:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர்,இருப்பாளி ஒருவாப்பட்டி, புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மளிகை கடை, பெட்டி கடைகளில் தமிழக அரசால் தடைசெய்ய செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அன்பு பூலாம்பட்டி காவல் துறை ஆய்வாளர் சந்திரலேகா தலைமையில், உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம், தமிழ்ச்செல்வன்,மாது,ஈஸ்வரன் மற்றும் போலீசார் உடன் கடைகளில் ஆய்வு செய்தனர் அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்ப்பனை செய்த ஐந்து கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, மேலும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு தொடர்ந்து குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

Tags:    

Similar News