வாகனச் சோதனையில் 50 கைக் கடிகாரங்கள் பறிமுதல்

செங்கம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் 50 கைக் கடிகாரங்கள் பறிமுதல்.

Update: 2024-04-12 06:11 GMT

கைக் கடிகாரங்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனச் சோதனையில் பல்வேறு ரக 50 கைக் கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செங்கத்தை அடுத்த அரசங்கண்ணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரகாஷ் தலைமையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு வாகனத் தணிக கையில் ஈடுபட்டனர். அப்போது, சிங்காரப்பேட்டை பகுதியில் இருந்து செங்கம் நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, வாகனத்தில் பல்வேறு ரக 50 கைக் கடிகாரங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கைக் கடிகாரங்கள் குறித்து வாகனத்தில் வந்த நபரிடம் விசாரித்தபோது, அவற்றுக்கு ஆவணங்கள் ஏதும் இல்லாததும், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவும் செய்தார். இதையடுத்து, கைக் கடிகாரங்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அவற்றை செங்கம் சேர்கல் துணை வட்டாட்சியர் செங்கம் தேர்தல் துணை வட்டாட்சியர் திருநாவுக்கரசிடம் ஒப்படைத்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கைக் கடிகாரங்கள் செங்கம் கருவூலத்தில் வைக்கப்பட்டன.
Tags:    

Similar News