மர்ம விலங்கு கடித்து 6ஆடுகள் உயிரிழப்பு

ஓமலூர் அருகே மர்ம விலங்கு கடித்து 6ஆடுகள் உடல் சிதைந்த நிலையில் உயிரிழந்தன.

Update: 2024-05-28 13:37 GMT
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளபிள்ளையார் கோயில் பகுதியில் வசிக்கும் ரங்கசாமி என்ற விவசாயி வளர்த்து வந்த 6 செம்மறி ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொடூரமான முறையில் உயிரிழந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் கால்நடை மருத்துவர் உதவியுடன் ஆடுகளையும் பிரேத பரிசோதனை செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News