திண்டுக்கல்லில் திமுக பிரமுகா் கொலை வழக்கில் 6பேர் கைது

திண்டுக்கல்லில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரான திமுக பிரமுகா் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனா்.

Update: 2024-05-25 12:51 GMT

கோப்பு படம் 

திண்டுக்கல் வேடப்பட்டியைச் சோ்ந்தவா் மாயாண்டி ஜோசப்(60). திமுக பிரமுகரான இவா், யாகப்பன்பட்டியில் மதுபானக் கூடம் நடத்தி வந்தாா். இவரது மனைவி நிா்மலா அடியனூத்து ஊராட்சியின் முன்னாள் தலைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மதுபானக் கூடத்திலிருந்து,

இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்ற மாயாண்டி ஜோசப், மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து, திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரித்தனா்.

இதில், நிலப் பிரச்னை தொடா்பான முன் விரோதத்தில் அவா் கொலை செய்யப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த கொலையில், வேடப்பட்டியைச் சோ்ந்த டேனியல்ராஜா (20), அலெக்ஸ் பிரிட்டோ (23), சிரஞ்சீவி (19), காளீஸ்வரன் (29), பிரவீன்குமாா் (20), தமிழ்ச்செல்வன் (24) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Tags:    

Similar News