600 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்.

600 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்து தலைமறைவான கார் ஓட்டுநரை தேடிவருகின்றனர்.;

Update: 2025-08-20 12:28 GMT
பரமத்தி வேலூர், ஆக.20:  பரமத்தி அருகே காரில் கடத்தப்பட்ட 600 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். காவல் உதவி ஆய்வாளர் பொன்குமார் தலைமையில் பரமத்தி போலீஸார் சேலத்தில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோனூர் கந்தம்பாளையம் மேம்பாலம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கர்நாடக பதிவெண் கொண்ட கார் பழுதாகி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. காரை சோதனை செய்தபோது அதில் 600 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. அதன்மதிப்பு ரூ.3.54 லட்சமாகும். கர்நாடக பதிவெண் கொண்ட காருடன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸார், தலைமறைவான கார் ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

Similar News