திருவொற்றியூரில் ரூ.6.31 லட்சம் பறிமுதல்

திருவொற்றியூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.31 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-27 02:23 GMT

வாகன சோதனை 

 தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவராஜ் மற்றும் திருவொற்றியூர் உதவி ஆய்வாளர் பாக்யராஜ் தலைமையில் திருவொற்றியூர் டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி திருவொற்றியூர் துலுக்காணம் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ரூபாய் 6,31,600 கொண்டு வந்த நிலையில் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News