கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் படுகாயம்

தாராபுரம் அருகே காரும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2024-04-23 02:56 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பழனி செல்லும் சாலையில் உள்ளது காட்டம்பட்டி பிரிவு. பழனி கோவிலுக்கு சென்று விட்டு பக்தர்கள் 7-பேருடன் ஊர் திரும்பிய ஈகோ வேன் மனக்கடவு கிராமம் காட்டம்பட்டி பிரிவு அருகே வரும்போது எதிரே ஈரோட்டில் இருந்து பழனி நோக்கி சென்ற ஹூண்டாய் சொகுசு கார் பக்தர்கள் வந்த ஈகோ வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

இவ்விபத்தில் பழனி கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சார்ந்த ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் சிவா (32) சூர்யா (30) மெய்யரசன் (35) ராஜா (25) கார்த்தி (32) ,நேபாளத்தைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியர் சந்தோஷ் (30), உட்பட 7-பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 7-பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News