புகையிலை பொருட்களை விற்பனை செய்த 7கடைகளுக்கு சீல்

புகையிலை பொருட்களை விற்பனை செய்த 7கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2023-12-02 10:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வேட்டைக்காரன் புதூர்,கோட்டூர், தென்செங்கம்பாளையம், பொன்னாச்சியூர், ஜமீன்கோட்டாம்பட்டி, அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்றதை அடுத்து கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags:    

Similar News