பழங்குடியின மக்களுக்கு ரூ.74லட்சம் மதிப்பில் கட்டிட பணி ஆணை

Update: 2023-11-16 06:00 GMT

வீடு கட்டுவதற்கான பணி ஆணை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் அடுத்த ஏகே மோட்டூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை 2022 மற்றும் 2023 ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் சார்பில் வீடற்ற பழங்குடி இன மக்களுக்கு இலவச வீடுகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலா ரூ. 4 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் 16 பழங்குடி இன மக்களுக்கு ரூ.73 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் வீடு கட்டும் பணி அணையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏகே மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலு மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு, வட்டாட்சியர் சங்கர் , கருணாநிதி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News