கண்மாய்கள் தூர்வாரப்படாததால் 800 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு

Update: 2023-12-18 01:41 GMT

தூர் வாரப்படாத கண்மாய்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்புவனம் அருகே இலந்தைகுளம் ஊராட்சியில், இலந்தைகுளம் கண்மாய், வண்ணான்குளம், பெரியகொள்ளேரி, சின்னகொள்ளேரி, இடையர்குளம் கண்மாய், மீனாட்சிபுரம் கண்மாய், என 6 காண்மாய்கள் உள்ளன. இக்கண்மாய் மூலம் 800 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அப்பகுதியில் கடந்த 18 ஆண்டுகளாக எதிர்பார்த்த மழை இல்லை. இதனால் 6 கண்மாய்களிலும் போதிய தண்ணீர் தேக்க முடியவில்லை. கண்மாய்கள் தூர்வாமல் வரண்டும், சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்தும் காணப்படுகின்றன. இதனால் 800 ஏக்கர் விளைநிலங்களும் தரிசாக விடப்பட்டுள்ளது. இந்த 6 கண்மாய்களுக்கு கால்வாய் மூலம் வைகையாற்று நீரை கொண்டு வர வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்
Tags:    

Similar News