9வது வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம் போக்சோவில் சென்றவர் மீண்டும் அட்டூழியம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போக்சோ வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்த நபர் சிறுமியிடம் மீண்டும் சில்மிஷம் , வீட்டை அடித்து உடைத்து கொலைமிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று காவல்துறையினர் மீது குற்றம்சாட்டி மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு

Update: 2024-07-22 12:18 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமயிலாடி கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுரேந்தர் என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலியல் சில்மிஷன் செய்ததாக சீர்காழி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சுரேந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளியில் வந்த  சுரேந்தர் கடந்த 18ஆம் தேதி இரவு மீண்டும் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து  பிரச்சனை செய்து தங்கள் மகளை கொன்றுவிடுவதாக மிரட்டி வீட்டு உபயோக பொருட்களை அடித்து நொறுக்கி குடும்பத்தினரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.  காவல் உதவி எண் 100க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆணைக்காரன்சத்திரம் போலீசார் வந்து விசாரணை செய்த நிலையில் மேற்படி காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சமூக ஆர்வலர் சங்கமித்ரன் என்பவருடன் வந்து புகார் மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக  விசாரணை செய்ய காவல்துறைக்கு மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை பரிந்துரைத்துள்ளார்.

Similar News