மணப்பாறை : சாலை விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 9 பேர் காயம்

கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய போது கட்டுபாட்டை இழந்து வண்டி மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது

Update: 2023-12-22 09:46 GMT

அயப்ப பக்தர்கள் காயம்

மயிலாடுதுரை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுமார் 16 பேர் ஒரு வேனில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு பின்னர் ஊர் திரும்பினர். இன்று காலை திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி ஆத்துப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் மயிலாடுதுறை பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த முத்து (வயது 45), ஸ்ரீஜன் (வயது 8) உள்ளிட்ட 9 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News