சந்து கடையில் மதுபாட்டில்கள் விற்ற 9 பேர் கைது - 76 பாட்டில்கள் பறிமுதல்

ரோந்து பணியின் போது சட்டவிரோத மது விற்பனை கண்டறியப்பட்டது

Update: 2023-12-15 08:52 GMT

சந்து கடையில் மதுபாட்டில்கள் விற்ற 9 பேர் கைது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சந்து கடையில் மதுபாட்டில்கள் விற்ற 9 பேர் கைது 76 பாட்டில்கள் பறிமுதல் தர்மபுரி, டிச.15: அரூர் எஸ்ஐ சக்திவேல் மற்றும் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழையபேட்டை பகுதியில் மதியழகன் (50) என்பவர் வீட்டின் பின்புறம், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதியழகனை கைது செய்த போலீசார், விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 73,650 மதிப்பிலான 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், மாரண்டஅள்ளியில் எஸ்ஐ ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது.சினிமா தியேட்டர் பின்புறம் மது விற்பனையில் ஈடுபட்ட மகேந்திரன் (48) என்பவரை கைது செய்து,அவரிடம் இருந்து 4,030 மதிப்பிலான 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், தர்மபுரிமாவட்டம் முழுவதுமாக.கூடுதல் விலைக்கு மது விற்ற 7 பேரை, போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News