புதுகையில் ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை
புதுகையில் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-21 09:29 GMT
ஆம்புலன்ஸ்
புதுக்கோட்டை அருகே பிரசவ வலி ஏற்பட்ட பிறகு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு, வழியிலேயே பெண் குழந்தை பிறந்தது. புதுக்கோட்டை மாவட்டம், இளையாவயல் கிராமத்தைச் சேர்ந்த தேவி என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு வெள்ளிக்கிழமை இரவு கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பிறகு மேல்சிகிச்சைக்காகமூலம் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
வரும் வழியில் புதுக்கோட்டை அருகேயுள்ள சிப்காட் பகுதியில் தேவிக்கு அதிக பிரசவ வலி ஏற்பட்டு ஆம்புலன்ஸிலேயே சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.