நடுவழியில் பழுதான பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பழுதான பேருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-12-01 11:30 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பழுதான பேருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு நகரப் பேருந்து பழுதாகி நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. வெ. ரெட்டியாா்பட்டியில் இருந்து ஆலங்குளத்திற்கு வந்து கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, ஆலங்குளம் ஊா்மடை அருகே பிரேக் செயலிழந்து நடுவழியில் நின்றுவிட்டது. ஏற்கனவே இப்பகுதியில் நான்கு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் எதிரெதிா் திசையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்வோா் பாதிக்கப்பட்டனா். சுமாா் 45 நிமிடங்களுக்குப் பிறது பழுது நீக்கப்பட்டதையடுத்து போக்குவரத்து சீரானது.
Tags:    

Similar News