சிவகங்கை பேருந்து நிலையத்தில் பிரேக் பிடிக்காத பேருந்தால் பரபரப்பு

சிவகங்கை பேருந்து நிலையத்தில் பேருந்து பிரேக் பிடிக்காததால் இரும்பு தூணில் மோதி சேதமடைந்தது.

Update: 2024-06-22 14:36 GMT

சிவகங்கை பேருந்து நிலையத்தில் பேருந்து பிரேக் பிடிக்காததால் இரும்பு தூணில் மோதி சேதமடைந்தது.


சிவகங்கை பின்தங்கிய மாவட்டமாக பார்க்கப்படும் சூழலில் மாவட்டம் முழுவதும் அதிகளவு பழைய பேருந்துகளே இயங்கி வருகிறது. இந்நிலையில் மதுரையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் செல்வதற்காக அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்தை பெருமாள் என்ற ஓட்டுநர் ஒட்டி வந்துள்ளார். இந்த சூழலில் சிவகங்கை பேருந்து நிலையத்திற்குள் வந்த அரசுபேருந்து, பயணிகளை இறக்கி விட்டு பின்னர் வண்டியை நிறுத்த முற்பட்ட போது, பேருந்தின் பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பேருந்துநிலைய இரும்பி கம்பியில் மோதி பேருந்து நின்றது. இதனால் அந்த கம்பி வளைந்து. பேருந்தின் முன்பக்க கண்ணாடியும் உடைந்தது. பேருந்து வருவதை பார்த்த அங்கிருந்த சாலை வியாபாரிகள் சுதாரித்து ஓடிவிட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News