ஆலங்குளம் அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-13 02:32 GMT
ஆலங்குளம் அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

தென்காசி ஆயிரப்பேரியைச் சோ்ந்தவா் காவேரி மகன் கணேஷ்குமாா்(38). கட்டட ஒப்பந்ததாரரான இவா், திருநெல்வேலியில் பயன்படுத்தப்பட்ட காா் ஒன்றை சனிக்கிழமை வாங்கி, தென்காசி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். ஆலங்குளத்தை அடுத்த மாறாந்தை பி.எஸ்.என்.எல் அலுவகம் அருகே வந்த போது, பேனட்டில் இருந்து கரும்புகை வந்ததாம்.

இதையடுத்து காரை நிறுத்தி சோதனையிட முயன்றபோது தீப்பற்றி எரிந்துள்ளது. தகவலின் பேரில் வந்த ஆலங்குளம் தீயணைப்பு நிலைய வீரா்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். எனினும் காா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Tags:    

Similar News