முதியவர் ஒட்டிய டூ வீலர் மீது கார் மோதி விபத்து !

முதியவர் ஒட்டிய டூ வீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-04-17 08:42 GMT

வழக்கு பதிவு

முதியவர் ஒட்டிய டூ வீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, தோட்டக்குறிச்சி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியண்ணன் வயது 56. இவர் ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் 12 மணி அளவில், கரூரிலிருந்து சேலம் செல்லும் சாலையில் அவரது எலக்ட்ரிக் டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் மன்மங்கலம் நால்ரோடு அருகே வந்தபோது, அதே திசையில் வேகமாக வந்த, அரவக்குறிச்சி தாலுக்கா, பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சமீர் அன்சாரி என்பவர் ஓட்டி வந்த ஹோண்டா ஐ 10 கார், பெரியண்ணன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பெரியண்ணனுக்கு வலது கை, நெற்றி, இடது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரிலுள்ள கபிலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரியண்ணன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய, சமீர் அன்சாரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags:    

Similar News