சின்னசேலம் அருகே பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

சின்னசேலம் அருகே பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-05-05 08:53 GMT

காவல் நிலையம்

சின்னசேலம் அடுத்த கீழ்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகள் கீர்த்தனா,25; இவரும், பெருமங்களத்தை சேர்ந்த கேசமுத்து மகன் கவியரசு,25; என்பவரும் கடந்த இரண்டறை வருடங்களாக காதலித்துள்ளனர்.

கடந்த பிப்., மாதம் 15ம் தேதி கவியரசு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கீர்த்தனாவுடன் உறவு கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி கவியரசுவின் வீட்டிற்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கீர்த்தனா தெரிவித்துள்ளார். அப்போது, கவியரசு மற்றும் அவரது குடும்பத்தினர் கீர்த்தனாவை அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து கீர்த்தனா அளித்த புகாரின் பேரில், கேசமுத்து மகன் கவியரசு, அவரது தந்தை கேசமுத்து, தாய் மனோன்மணி, நடராஜன் மனைவி ராஜேஸ்வரி ஆகிய 4 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News