பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு
கரியாலுார் அருகே பெண்ணைத் தாக்கிய கணவன், மனைவி மீது வழக்கு;
By : King 24x7 Angel
Update: 2024-02-05 06:03 GMT
பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு
கரியாலுார் அருகே பெண்ணைத் தாக்கிய கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கல்வராயன்மலையில் உள்ள தாழ்வெள்ளாலுார் பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜ் மனைவி குழந்தையம்மாள், 34; கூலித் தொழிலாளி. இவர், அதே ஊரைச் சேர்ந்த 4 பேருக்கு மகளிர் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். இதில், மணிமாறன் மனைவி சிந்து தவணைத் தொகையை கட்டவில்லை. இது தொடர்பாக கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த 1ம் தேதி குழந்தையம்மாளை, சிந்து மற்றும் அவரது கணவர் மணிமாறன் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் கரியாலுார் போலீசார் மணிமாறன், சிந்து ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.