பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

திருப்புவனத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு. செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-02-17 16:48 GMT

காவல் நிலையம் 

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நகை அடகு கடை நடத்தி வருபவர் சரவணன். இவரது கடையில் மடப்புரத்தைச் சேர்ந்த முத்துராக்கு என்கிற பெண் நகையை அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்டு, பின்னர் பணத்தை திரும்பி செலுத்திய நிலையில் நகையை திரும்பி கொடுக்காமல் அவர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது‌.

இதுகுறித்து முத்துராக்கு கேட்டபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நிலையில் திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News