வருசநாடு அருகே மனைவியை மிரட்டிய கணவன் மீது வழக்கு பதிவு
வருசநாடு அருகே மனைவியை மிரட்டிய கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-06-02 14:13 GMT
வருசநாடு அருகே மனைவியை மிரட்டிய கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வருசநாட்டைச் சேர்ந்த வெற்றிச்செல்வம் இவரது மனைவி நாகலட்சுமி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான வெற்றி செல்வத்திடம் வீட்டுச் செலவுக்கு நாகலட்சுமி பணம் கேட்டதால் அவரை வெற்றிச்செல்வம் அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் தன்னைத் தவிர மற்ற யாருடனும் பேசக்கூடாது என்று கூறி மிரட்டி உள்ளார் நாகலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வெற்றி செல்வம் மீது வழக்கு பதிந்துள்ளனர்