சூளகிரி பேக்கரியில் தகராறில் ஈடுபட்ட நபர் மீது வழக்கு பதிவு

சூளகிரி பேக்கரியில் தகராறில் ஈடுபட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-05-05 15:36 GMT
பேக்கரியில் தகராறில் ஈடுபட்ட நபர் மீது வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியைச் சார்ந்தவர் பாக்கியராஜ் வயது 36 இவர் விருதுநகர் மாவட்டம் ஆவியூர் மேற்கு புற பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள பேக்கரியில் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அங்கு கடந்த 2ஆம் தேதி இரவு 9 மணி 55 நிமிடம் அளவில் கடைக்கு வந்த ஆவியுறை சார்ந்த குமார் என்ற ராமச்சந்திரன் கூல்ட்ரிங்க்ஸ் கேட்டதாகவும் அதற்கு பாக்கியராஜ் பணம் கேட்டதற்கு பணம் கொடுக்காமல் கூல்ட்ரிங்ஸ் கேட்டதாகவும் தர மறுத்ததை அடுத்த குமார் என்று ராமச்சந்திரன் கடையின் உரிமையாளருக்கு போன் போடச் சொல்லியதாகவும் கூறப்படுகிறது. 

 பாக்கியராஜ் மொபைலில் உரிமையாளர் சின்னச்சாமிக்கு போன் போட்டு கொடுத்ததாகவும் அப்பொழுது கடையின் உரிமையாளர் சின்னசாமி பணம் கொடுத்து பொருள் வாங்கிக் கொள்ளக் கூறியதை அடுத்து ஆத்திரமடைந்த அவர் போனை கீழே போட்டு உடைத்ததாகவும், 

இது குறித்து ஆவியர் காவல் நிலையத்தில் பாக்யராஜ் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags:    

Similar News