தொடர் காத்திருப்பு போராட்டம்

ராசிபுரம் அடுத்த பெருமாகவுண்டம்பாளையம் கிராமத்தில் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

Update: 2023-12-27 12:09 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பெருமாகவுண்டம்பாளையம் கிராமத்தின் வழியாக செல்லும் ஒடுவன்குறிச்சி முதல் ஜேடர்பாளையம் வரையிலான ஊராட்சி ஒன்றிய சாலையில் சர்வே எண் 12-1/208-ல் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற கோரியும், அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள சாலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க கோரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பெருமாகவுண்டம்பாளையம் கிளை சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது .

முன்னதாக, 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தை, மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி துவக்கி வைத்தார். இப்போராட்டத்தில், பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டடோர் பங்கேற்று வருகின்றனர்.

Tags:    

Similar News