பைக் மோதி பசுமாடு பலி

கள்ளகுறிச்சி அருகே இருசக்கர வாகனம் மோதி பசுமாடு பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-31 10:56 GMT

பசுமாடு பலி

கள்ளக்குறிச்சி அடுத்த அம்மகளத்துாரைச் சேர்ந்தவர் பச்சமுத்து, 46; விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் தனது பசுமாட்டினை வீட்டிற்கு அருகே உள்ள வேப்ப மரத்தில் கட்டி வைத்திருந்தார். அப்போது, உலகியநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சுரேந்தர் என்பவர் ஓட்டி வந்த பைக், பசுமாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே மாடு இறந்தது. இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News