மாற்றுத்திறனாளி மனு தாக்கல் !

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் மாற்றுத்திறனாளி சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார்.

Update: 2024-03-26 04:40 GMT

மாற்றுத்திறனாளி மனு தாக்கல்

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் மாற்றுத்திறனாளி சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார். திருக்கோவிலுார் அடுத்த ஆலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் பாலகிருஷ்ணன், 38; கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்தினாளிகள் உரிமை சங்க செயலாளராக உள்ளார். கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஷ்ரவன்குமாரிடம் மனு தாக்கல் செய்தார். பாலகிருஷ்ணனுடன், மாற்றுத்திறனாளிகள் மூன்று பேர் 'வீல் சேரில்' உடன் சென்றனர்.
Tags:    

Similar News