கபிலர்மலை அருகே சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி பலி.

கபிலர்மலை அருகே நடந்த சாலை விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-06-13 02:12 GMT

சாலை விபத்து

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குப்புசாமி( 53 ).இவர் மாற்றுத்திறனாளி. இவர் நேற்று ஜேடர்பாளையம் ஹை ஸ்கூல் மேடு பகுதியிலிருந்து தனது பேரன் நிஷ்வந் (5) என்பவரை மோட்டார் சைக்கிளிங் முன்னாள் நிற்க வைத்துக் கொண்டு ஜேடர்பாளையம் வடக்கு தெருவில் உள்ள தனது வீட்டிற்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது கபிலர்மலை -ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் அருகே வந்தபோது அவருக்கு பின்னால் வடகரையாத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்( 48 )என்பவர் மோட்டார் பைக்கை அதிகமாக ஓட்டி வந்து குப்புசாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் குப்புசாமி நிலை தடுமாறி மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் உடன் தார்சாலையில் கீழே விழுந்தார் .இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதேபோல் அவரது பேரனுக்கும் காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குப்புசாமியை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், அங்கிருந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இது குறித்து குப்புசாமியின் மனைவி சாரதா (43) என்பவர் ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News