மகன் அடித்ததால் மனமுடைந்த தந்தை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை !
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே மகன் அடித்ததால் மனமுடைந்த தந்தை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-04 07:25 GMT
தற்கொலை
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே மகன் அடித்ததால் மனமுடைந்த தந்தை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை. நாகை மாவட்டம் தலைஞாயிறு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வாட்டாகுடி கீழ அரிசன தெரு பகுதியை சேர்ந்தவர் ராசு மகன் பன்னீர் வயது 73 இவருக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகன்கள் உள்ளனர் அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வந்தனர் இந்த நிலையில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி காலை 7 மணிக்கு பன்னீர் தனது இளைய மகன் அப்பா சாமி என்பவருக்கு சொந்தமான விறகினை எடுத்து அடுப்பு எரித்துள்ளார். இதனை அறிந்த அப்பாசாமி தனது தந்தை பன்னீரை கையால் தாக்கி உள்ளார் இதில் மனம் உடைந்த பன்னீர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சையில் இருந்த பன்னீர் சிகிச்சை பலனின்றி மார்ச் 3 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:30 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பன்னீர் மகள் வேதாரண்யம் மறைஞாய நல்லூர் பகுதியை சேர்ந்த கலைவாணி தலைஞாயிறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.