அரை நிர்வாணமாக கலாட்டா செய்த போதை ஆசாமி

குடிபோதையில் போலீசாரை கண்ட ஆசாமி ஆடைகளை கழற்றி வீசி, அரை நிர்வாணமாக கலாட்டா செய்தார்.

Update: 2024-01-05 11:52 GMT

பைல் படம்

வேடசந்துார் ஆத்துமேடு கரூர் ரோட்டில் குடி போதை நபர் ஒருவர் பெண்களிடம் கலாட்டா செய்வதாக வேடசந்ததுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., பாண்டியன் தலைமையில் வந்த போலீசாரை கண்டதும் அமைதியான நபர் போலீசார் சென்றதும் மீண்டும் கலாட்டாவில் ஈடுபட்டார். மீண்டும் போலீசாருக்கு தகவல் செல்ல மீண்டும் வந்த போலீசாரை கண்டதும் வாகனங்களை தடுத்து நிறுத்தினார். மேலும் தனது ஆடைகள் ஒவ்வொன்றாய் கழற்றி வீசிய அவர் நிர்வாணமாக ரோட்டில் உலா வந்தபடி நடு ரோட்டில் படுத்துக்கொண்டார். .போலீசாரோ அங்கிருந்த சில இளைஞர்கள் உதவியுடன் ஓரமாக துாக்கிச் சென்றனர். போலீசாரே புது கைலி வாங்கி கொடுத்து அணிய செய்து நாளைக்கு ஸ்டேஷனுக்கு வா என கூறி விட்டு சென்றனர்.
Tags:    

Similar News